2.1.11

பயம்

உன் பெயரை எழுதவும் பயமாயிருக்கிறது..
பேனா முள் உன்னைக் குத்தி விடுமோ என்று!!

9 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

பயம் என்றால்.... இப்படி செய்யுங்கள்

// பீலி ஒன்றை எடுத்து தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்//

வலிக்காமல்.. ருசிக்கட்டும்.... தங்கள் கவிதைப்போல்


நவீன திருக்குறளாய்.... இரண்டடியில் காதலின் மென்மை
அதிக கனமாய் மனதுக்குள் இடம் பிடித்துக்கொண்டு...

உங்கள் கவிதையை வர்ணிக்க எனக்கு பயமாய் இருக்கிறது
எந்தன் வரிகள் உங்கள் வரிகளைவிட அதிகமாகிவிடுமா என்று...

கயல்விழி said...

தங்கள் வருகைக்கு நன்றி!
அழகுத் தமிழ் கவிதை பதிலால் பேருவகை!!

//தேனால் கையொப்பமிடப்போய்
தேனுக்குத் திகட்டி விட்டால்??

பீலியால் கையொப்பமிடும் அதிர்வைத் தாங்காமல்
என் வாழ்விடம் அதிரத்தொடங்கிவிட்டால்??? வேண்டாம் எனக்கொரு பூகம்பம்!!!
//

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

//தேனால் கையொப்பமிடப்போய்
தேனுக்குத் திகட்டி விட்டால்??//

சரிதான்...

செடியில் பூத்த ரோஜா.. அதனை சூடும் ரோஜாவை பார்த்து வாடியதாம்... அப்படியோ??

// பீலியால் கையொப்பமிடும் அதிர்வைத் தாங்காமல்
என் வாழ்விடம் அதிரத்தொடங்கிவிட்டால்??? வேண்டாம் எனக்கொரு பூகம்பம்!!!//

அப்படியென்றால் பீலியால் கையொப்பம் இடுவதை மாற்றி மெல்ல பீலியாலும் வருடிவிட வேண்டியதுதான்... அதிர்விடம் உறைவிடமாய் மீண்டு(ம்) உறைந்து போகட்டும்...

கயல்விழி said...

//செடியில் பூத்த ரோஜா.. அதனை சூடும் ரோஜாவை பார்த்து வாடியதாம்... அப்படியோ??//

மிகச் சரி.. அப்படியே தான்..

//அப்படியென்றால் பீலியால் கையொப்பம் இடுவதை மாற்றி மெல்ல பீலியாலும் வருடிவிட வேண்டியதுதான்... அதிர்விடம் உறைவிடமாய் மீண்டு(ம்) உறைந்து போகட்டும்...//

என் உறைவிடத்தில் எவருக்கும் அனுமதியில்லை..
என் பணியினில் பீலிக்கும் பங்கில்லை..
வலி பட்ட இடத்தை வருட உரிமை
என் விரல்களுக்கு மட்டுமே!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

உறைவிடத்தில் இந்த அண்ணனுக்கும் இடமில்லையா?

கயல்விழி said...

உறைவிடம் என்று குறிப்பிட்டது என்னைக் கொண்டிருக்கும் இதயத்தை.. என் இதயத்தில் கண்டிப்பாக அண்ணனுக்கு இடம் உண்டு..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஒஹோ... அப்படியா... இப்ப புரியுது....

மிக்க நன்றி...
அண்ணனாக ஏற்றுக்கொண்டமைக்கும், இதயத்தில் இடம் கொடுத்தமைக்கும்...

Ram kumar said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :) #http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

மின் வாசகம் said...

அழகிய பயம் !!!

Post a Comment