4.1.11

தேடல்

வார்த்தைகளின் வேலைநிறுத்தம்,
கற்பனையின் கடுங்கோபம்!!
மனதினுள் என்ன கோரிக்கை?
பேனா தலை குனிய தடுப்பேதோ உளது!
தமிழ்த்தாயே! மகளின் மேல்
சினமேன்றால் உணவளிக்க மறுப்பது முறையோ?
மையிலோ மையலிலோ தடையில்லை..
மனமுடைய நியாயமே இல்லை..
இல்லாத ஒன்றைத் தேடுவது போல்
ஓர் உணர்வு..
தேடுகிறேன் கவிக்குள் கவியை..

No comments:

Post a Comment