20.1.11

அணி(நீ)கலன்கள்

நீ என் காதணி..
நான் தலையசைக்கும் போதெல்லாம்
மகிழ்ந்து ஆடுகிறாயே!

நீ என் கழுத்துச் சங்கிலி..
என் இதயத்தோடு எப்போதும்
இணைந்திருக்கிறாயே!

நீ என் கைவளையல்..
என் மௌனத்திற்கும்
குரல் அளிக்கிறாயே!

நீ என் மோதிரம்...
நான் உணவுண்ணும் போதெல்லாம்
சேர்ந்து உண்ண விழைகிறாயே!

நீ என் கொலுசு..
உன் சத்தம் சிலநேரம்
என்னையே சிலிர்க்கச் செய்கிறதே!!!

No comments:

Post a Comment