16.2.11

கடற்கரைக் கேள்விகள்

வளர்கிறேனா தேய்கிறேனா
கண்டுபிடி! சவால்விடும்
15 நாள் குழவி- நிலாப்பெண்..

அவளுள் புதைந்திருக்கிறேனா
பிரிந்திருக்கிறேனா கேள்வியெழுப்பும்
கரையோரத் தென்னையின் கீற்று..

கீற்று ஆட நான் பிறக்கிறேனா?
நான் தவழக் கீற்று ஆடுகிறதா?
குழப்பத்தில் தென்றல்..

இனிதாய்த் தாலாட்டுவது
நீயா நானா?? தென்றலிடம் 
போட்டியிடும் அலையோசை..

எந்தக் கேள்வியுமின்றி
காலத்தோடு கரையும் என் மௌனம் மட்டும்...


1 comment:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

Mounam! Oyatha Alaikalaga... veesum thendralaka idhyathirkul...

:) ;)

Post a Comment