24.2.11

அழகு

'அம்மா' எனும் முதல் சொல்லால்
ஈன்றவள் மனம்நிறைக்கையில்..

எட்டி இரண்டடி வைத்து
பெற்றவனுக்குப் பேருவகை அளிக்கையில்..

உடுத்தத் தெரியா சேலை சுற்றி
உறவினரில் சிரிப்பு விதைக்கையில்..

முதல் கவிதைக் கிறுக்கல் கிறுக்கி
தான் மட்டும் படிக்கையில்..

முதல் காதல் மலர்ந்து அவனை
நினைத்துத் தானாய் சிரிக்கையில்..

மணந்தவன் கைப்பிடித்த நாணத்துடன்
பெற்றோர் பிரிவுக் கண்ணீர் சேர்கையில்..

குழவியின் முதல் ஸ்பரிசம் கொண்டு
அதன் அழுகை ரசிக்கையில்..

வெளிப்படுகிறது தானாய்..
பெண்மையின் உண்மை
இயற்கை அழகு!!!

2 comments:

Anonymous said...

பெண்மையின் உண்மை
இயற்கை அழகு!//மென்மையான அழகு வரிகள்

கயல்விழி said...

நன்றி சகோ :)

Post a Comment