24.7.11

தண்டனை

எப்போதும் உன்னைச் சுற்றியே
அமைப்பதற்காய் கோபித்துக்கொண்டன
என் எழுத்துக்கள்...
அதை மதித்து
வேறு ஏதேதோ எழுத
நான் முயற்சிக்க,
எந்த பாடுபொருளும்
உன்னை நெருங்கக்கூட
முடியாமல் இருக்க,
தன் தவறை உணர்ந்து
குற்ற உணர்வோடு
என் பேனா
முள்ளிலேயே
வாழ்நாள் சிறை என்று
சுய தண்டனை அளித்துக்கொண்டன
என் எழுத்துக்கள்..
வேலையில்லாமல் என்
கணினியின் மொழிமாற்றி..

2 comments:

solomon.J said...

புரியாமல் புரிந்த தண்டணை க(வி)தை அருமை..

Anonymous said...

கவிதை அருமை...

Post a Comment