நான் சிந்திக்கத் தொடங்கிய
ஒரு நாளில் நீ பேசத் தொடங்கினாய்!
என் மூளையையும் இதயத்தையும்
மாற்றி மாற்றி படமெடுக்கும்
கதிரியக்கமானாய்!
என் மனமுறைவதைச் சரியாய்ச்
சொல்கிறாய் என்று வியந்திருக்கிறேன் பலநாள்..
நான் சிந்த முடியாது
பகட்டுப் புன்னகையால் மறைத்த
கண்ணீரையும் கோபத்தையும் சிந்தியது நீ!
வரும் நாட்களில் என் துணைவனுக்கும்
வரக்கூடும் பொறாமை
நம் நெருக்கம் கண்டு..
வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
என் சிந்தனை மரிக்கும் வரை
நில்லாத உன் ஓட்டம்..
என் அன்புக்குரிய எழுதுகோலே!