18.3.12

வெற்றுத்தாளின் வெறுமை

தென்றலும் தோழியும் துணையிருக்க, 
புன்னகையும் பென்சிலும் என் இதழிலோடுவது 
கண்டு கேட்டாள், “கவிதையா?”
புரியாத சிரிப்பொன்று பதிலாய்க் கிடைக்க
“காதலா?” என்றபடி வெற்றுத்தாளில் எதிர்பார்ப்புக் கண் பதித்தாள்!
பெண்டுலத்தின் இரு நொடிப் பயணமாய் நான் தலையசைக்க
காற்றிழந்த பலூனாய் மீண்டும் தன் மடிக்கணிணியில் மூழ்கிப்போனாள்!

மனதில் அப்போதுதான் அந்தக் கேள்வி உதித்தது,
காதல் இல்லை! வேறென்ன??
பாசமா? பசையில்லை!
நேசமா? நெருக்கமொன்றும் அதிகமில்லை!
நட்பா? அதைத்தாண்டிய ஈர்ப்பொன்று இருக்கிறது!
குழப்பத்தையும் ரசித்துக் கொண்டிருக்கையில்,
அலைபேசி முகமொளிர, நானும் அதைத்தொடர 
திரையில் ஒளிர்கிறது அந்தப்பெயர்! 
வெற்றுத்தாள் வெறுமையால் வழிகிறது! 

2 comments:

புஷ்பராஜ் said...

எளிமையான இயல்பான சொல்லாடல்கள்!!

Siva Pon Gokul said...

Nice one...

Post a Comment