6.6.12

விளையாட்டு

வேண்டுமென்றோ கட்டாயத்திலோ
பாதியில் விடப்பட்ட ஆட்டத்தின்
சேதி சொல்கின்றன,
சுண்ணக்கட்டி தாயக்கட்டத்தின் மேலுள்ள
புளியங்கொட்டைக் காய்கள்..

புதிதாய் வாங்கிய இந்த வீட்டில்
இதற்கு முன் இருந்த முகம்தெரியா
குழந்தைகளின் நினைவில் நான்!
"இந்த வீட்ட இடிச்சிட்டு புதுசா பெரிய்யய
வீடு கட்டப்போறோமா அம்மா??"
என்றபடி வந்து என் காலைக் கட்டிக்கொள்ளும்
என் குழந்தையின் கையில் புதியதொரு
லூடோ போர்டும் நெகிழிக் காய்களும்!!!

No comments:

Post a Comment