15.8.12

புகைப்பட நொடி

கண்ணுக்கெட்டுகிற தொலைவிலிருந்து
பார்க்கிறேன்!
புகைப்படத்திற்காய்ச் சிரிக்கிறாய்!
அந்த செயற்கைச் சிரிப்பிடம் 
வெட்கித் தோல்வி அடைகின்றன
சுற்றுவட்டாரத்தின் பல இயற்கைச் சிரிப்புகள்!
உன் முகத்தின் பிரகாசம் நிறைத்துவிடுகிறது
சுற்றுப்புறத்தின் ஒளிக்குறைவை!
உன் கன்னக்குழியின் அழகு மொத்தத்தையும்
குவிக்க முடியாமல் திணறுகிறது
நிழற்படக்கருவியின் குவியாடி!
வண்ணப் புகைப்படத்தில் உன்னைத்தவிர
எல்லாமே கருப்பு வெள்ளையாய்த்தான் இருக்கும்!
விசை அழுத்தப்பட்டு புகைப்படத்தில்
நீ பதியும் அந்த நொடியில்
ஸ்தம்பிதுப்போகிறது என் உலகம்!!!

2 comments:

புஷ்பராஜ் said...

ஸ்தம்பித்துப் போகிறேன் உலகின் ஒரு புள்ளியாகிய நானும்

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான வரிகள்...

மிகவும் ரசித்த வரிகள்...

/// வண்ணப் புகைப்படத்தில் உன்னைத்தவிர
எல்லாமே கருப்பு வெள்ளையாய்த்தான் இருக்கும்! ///

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

Post a Comment