27.3.14

தினம் நடக்கும் இவ்வழியில்..

கண்ணை உறுத்தும் எழுத்துப்பிழையோடான
அறிவிப்புப்பலகை இருந்திருக்கக்கூடும்
இன்றைப்போல் அன்றும்!

வழியெங்கும் பார்வையால் துகிலுரியும் பாவி துச்சாதனர்கள் இருந்திருப்பார்கள்
இன்றைப்போல் அன்றும்!

வெள்ளை உடையணிந்த நேரம்பார்த்து சேற்றை மேலிறைத்தன மகிழுந்துகள்
இன்றைப்போல் அன்றும்!

ஆனாலும் வெறுப்பேற வழிநெடுகிலும் சாக்குகள் சிக்கியதில்லை,
இன்றைப்போல் அன்று!

வழித்துணை உந்தன் இடம் வெறுமை இன்று..

No comments:

Post a Comment