1.6.15

மயிரிழை

நீள அகல நிற அளவீடுகள்
நூல்பிடிக்கின்றன என் ஒழுக்கத்தை!
எழுந்து நின்று வெளிப்படுத்தும்,
வார்த்தைகள் பேசா உணர்வுகள் சிலதை!
உயிரற்று உணவில் விழும் ஒரு சுருளில்
தீர்மானிக்கப் படுகிறது நம் உறவின் வலிமை!
மதிக்காத மயிரிழைகளில்தான்
நடக்கின்றன நிர்ணயங்கள் பல!

No comments:

Post a Comment