11.10.15

ஆழிமழைக் கண்ணா :)

கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!
மயங்கிப் பாசுரமும் இயற்றினேன்,
சூடிக்கொடுத்தேன்..
சிலநாளில் நீ விஷமக்கண்ணன் என்றறிந்தேன்..
கோபிகைகள் கொஞ்சினால் கூட என்ன?
பாமா கிருஷ்ணனோ? ஆனால் என்ன!
கோகுலக்கிருஷ்ணனாம்,
அனந்தகிருஷ்ணனாம்,
நந்தகிருஷ்ணனாம்!
ஏதானால் என்ன?
காதல் குறையாத வரமுண்டு எனக்கென்றிருந்தேன்!
ஒரு நன்னாளின் முன்னிரவில்
ராதாகிருஷ்ணன் நீயென அறிந்தேன்,
இதொன்றில் ஆய்ப்பாடிவிட்டு வந்தேன்,
சூடிய மாலையைத் திருப்பிக் கொடுத்துவிடு
ஆழிமழைக் கண்ணா :)

No comments:

Post a Comment