2.9.16

ஆனந்தம்

ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கும் பேருந்திலிருந்து இறங்கி எங்கே செல்வதென்று முடிவெடுக்காமல் பத்து நிமிடம் செலவழிக்க நேர்ந்தது :) சாலையைக் கடப்பதற்காக மட்டும் 10 நிமிடம் முன்னதாகக் கிளம்ப வேண்டியிருக்கிற சாலை, செவித்திறன் இழப்பேனோ என்ற பயம் ஏற்படுமளவு இரைச்சல். இறங்கியது சாலை ஓர நடைபாதை, அதிசயமாக சுத்தமாய் இருந்தது! நீண்ட மதில் சுவர் ஒரு இடுகாட்டினுடையது.. அதன் மதிலையொட்டி வைக்கப்பட்டு இருக்கும் கிறிஸ்து வழக்கத்திற்கும் அதிக கருணை சுரக்கும் முகம் கொண்டிருந்தார் :) என் ஒருபக்கம் நடக்கும் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்து மறுபக்கம் நிலவும் அமைதி சிரிப்பது போலிருந்தது! நோக்கமற்ற அந்த உலாவலும் தடைகளற்ற மன ஓட்டமும் :) ஆனந்தம்!

1 comment:

Post a Comment