2.9.16

வாய்ப்பு

முகப்பூச்சின் வண்ணம்போல்
லேசாய் விஷம் தடவி,
உன் கர்வம் கொன்ற கூர்வாள்..

ஜீவன் காலாவதி ஆவதற்குள்
மீண்டுமொரு தரிசனம்
நீ விரும்பிய சித்திரங்கள்..

கரிய ஓவியமொன்றின் பாற்குளம்,
அதில் மிதந்திடும் கோலிகுண்டு..

நீர் பரந்திருக்கும் குளத்தின்மேல்
விழுந்த நீர்த்துளியென
உன் தேகம் தழுவிய தண்மை..

உயிர் பிரிந்தாலும் உன்னைத்தழுவிச் செல்ல
உன் செல்ல விழிகளுக்கொரு வாய்ப்பு கொடு :)
தானம் செய் அன்பே என் விழிகளை! 

No comments:

Post a Comment