23.3.17

நோய்மையின் தனிமை

இழுத்துப்போர்த்திப் படுத்திருக்கிறேன்!

தானாகக் காய்ச்சல் தொட்டுப்பார்ப்பதில் எத்தனை வெறுமை?
வாய்க்கசப்பில் சொந்த சமையல் எத்தனை கசப்பு?
மாத்திரைக் கவர்கள் தானாகப் பிரிக்க எத்தனை கஷ்டம்?

எவரேனும் இருந்திருக்கலாம், எவரேனும்!
"வரட்டுமா? வரச்சொல்லட்டுமா?" ஒலிக்குமென
அலைபேசிகளை அணைத்துவைக்கிறேன்..
"இப்போ பரவால்லையா?" நுழைந்துவிடுமென கதவுகள் அடைக்கிறேன்..
எல்லா மகிழ்ச்சியும், எல்லா கொண்டாட்டங்களும்
அர்த்தமற்றுப் போகின்றன.

நோய்மையின் தனிமை பீடித்திருக்கிறது...
இல்லை, அது
தனிமையின் நோய்மை!

1 comment:

Post a Comment