என் மனக்குமுறல்கள் விதைத்த விதைகள் கவிதைகளாய்...
27.1.11
மின்விசிறி
நன்றி உனக்கு..
உன் காற்றால் அவள் கூந்தல்
முகம் மறைத்தது..
இல்லையேல்
சூரிய உதயம் என்றெண்ணி
எழுந்து நாளைத் தொடங்கியிருப்பேன்..
25.1.11
உடைகிறேன்
விழும்போதெல்லாம் உடைகிறேன்..
உன் மூக்குக்கண்ணாடிக்குள்..
குறுஞ்செய்தி(2)
புறாவைத்
தேடியவளின் ஏக்கம்..
கண்ணோடு கண்
நோக்கியவளின் நாணம்..
கடிதங்களில் கண்ணும் இதழும்
புதைத்தவளின் பூரிப்பு..
காணமல் தான் போய்விட்டது..
குறுஞ்செய்தி ஒலியை
தேடும் இக்காலப் பெண்ணிடம்..
குறுஞ்செய்தி
பறந்து போகிறது
என் கோபம்..
திரையில் ஒளிரும் உன்
குறுஞ்செய்திக் கொஞ்சலிலும் கெஞ்சலிலும்..
23.1.11
முதிர்கன்னி
கல்யாண ஏலத்தில்
விலைபோகாமல் நான்..
யார் சொன்னது
வைரமும் பிளாட்டினமும்
விலை உயர்ந்ததென்று??
அப்படியென்றால்
"மணமகனை" என்ன சொல்வீர்கள்??
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)