16.11.12

ஐம்புலன்

செவி சேர்கிறது தூரத்து
சேவல் அலாரம் ,

நாவின் அடக்கத்தையும்
சோதித்து விடுவதென்று

நாசி துளைக்கும் பரிச்சயமான
குளம்பி  மணம் ,

திறக்கும் போதே கண்களுக்கு
வேண்டும் அன்னையின் தரிசனம்,
மெய் கேட்டது அவளின் ஸ்பரிசம்..
விழிக்கிறேன்
துணிக்குவியலும் புத்தகக் கூட்டமும்
சூழ ஏமாந்தன என் ஐம்புலன்கள் 
விடுதி அறைக்குள் !!!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விடுதி அறைக்குள் நல்லதொரு கனவு...

Post a Comment