29.11.11

புதிர்


அச்சிலிருந்த முக்கோணங்கள் எல்லாம்
எழுந்து பெருத்து தூரத்து மலைகளாய் மாற,
கோடுகள் அனைத்தும் நீலமாயும் நீளமாயும்
வளைந்து நெளிந்து கடல்நீராக,
வட்டங்கள் அனைத்தும் எழுந்து
உருண்டு திரண்டு பாறைகளாய்க் கரைகட்ட,
முற்றுப்புள்ளிகள் தூறலாய்த் தூறி,
எழுத்துக்கள் எண்ணிலடங்காத விண்மீன்களாயும்
மீதமுள்ள வெற்றுத்தாள் நீண்டு வான்வெளியாயும் போக
உருவான ஒரு ரம்யமான சூழலை
விட்டு வர மனமில்லை என்றாலும்,
உடைத்தெறிந்து மீண்டுமனைத்தையும்
கிடத்தி தாளில் பதிக்கிறேன்!
மீண்டிருக்கிறது என் வினாத்தாள்!!!
செலுத்துகிறேன் சிந்தையையும் செயலையும்
விடைத்தாள் மேல்!
முடித்துப் பார்த்தால் விடைத்தாள்
மட்டும் அதிர்வெடிக்கு முந்தைய அண்டமாய்!

14.11.11

உன்னைக் காணும் தருணங்கள்

உன்னைக் காணும் தருணங்களில் 
தவிர்க்கவே முடிவதில்லை..
விழி ஓரம் ஒரு பார்வை,
இதழோரம் ஒரு புன்னகை,
மனதோரம் ஒரு கவிதை!!!

5.11.11

உன்னைக்கண்ட நாளில்

உன்னைக்கண்ட நாளில் தூக்கத்தை நான் மறந்தேன்!
தூக்கம் மறந்த போதும் கனவுகள் பல் கொண்டேன்!
எல்லாக் கனவுகளிலும் உன்னைத் தானே கண்டேன்!
உன் கனவுப் பார்வைகளாலும் என்னை மறந்தே பறந்தேன்!!! 

அன்றைய உந்தன் சட்டை நிறம்,
பக்கத்தில் நின்ற பச்சை மரம்,
எல்லாம் எண்டன் நினைவில் வரும்
அந்த நொடியில் என் நிலை மட்டும் நினைவில் இல்லவே இல்லையே!

உன் கவிதைகளால் என் கனவுகளைக்
களவாடிடுவாய் என்றிருந்தேன்!
கவிஞனாய் இல்லாவிட்டால் என்ன?
என் கவிதையாய் இருக்கிறாய் நீயே!

பேருந்தில் உன்னோடு ஒரு நெரிசல் பயணம்,
பைக்கின் பின்சீட்டில் ஓர் உரசல் பயணம்,
அழகாய் இனிதாய் அமைந்தது போல
வேண்டும் எனக்கொரு வாழ்க்கைப்பயணம்!

16.10.11

மீண்டும் ஒரு முறை


மீண்டும் ஒரு முறை
வேண்டும் எனக்கேட்கிறது
உயிர், அந்த சிலிர்ப்பை..
உடல், அந்த பறத்தலை..
மனம், அந்த புல்லரிப்பை..
நீ கேட்ட அந்த நொடி
“என்னோடு வருவாயா
வாழ்வு முழவதும்?”
பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது
இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட
வாக்குவாதங்களுக்கிடையே..
“பேச்சை மாற்றித் தப்பிக்கப் பார்க்காதே!”
என்ற பதிலும் வாடிக்கையாகிவிட்டது!
“அழகாய் இருக்கிறாய்!” என்று
நீ ரசித்த தருணங்கள்தான்
என் முகப்புத்தக முகப்பைப் பிடித்தன அன்று..
முகப்புத்தகப் படங்களில் பார்த்து கூட உனக்கு
ரசிக்கத் தோன்றுவதில்லை இப்போதெல்லாம்!
வாய் கொள்ள முடியாத அந்த சிரிப்பு,
மனம் கொள்ள முடியாத அந்த களிப்பு,
சொல் கொள்ள முடியாத அந்த தவிப்பு,
எல்லாம் மீண்டும் வேண்டும்
ஒரு முறையல்ல..
வாழ்வு முழுவதிற்கும்!!!
நன்றி: திண்ணை

6.10.11

சிற்பம்


‘பாவம் காகம், பசிக்குமென்று
ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’
என்று தொடங்கிற்று உன் காக்கா கதை!

பார்த்துப் பிடிக்கவில்லை,
பழகிப்பார்த்துப் பிடித்தது,
சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு!

‘ரெயின் ரெயின் கம் அவர் வே’ என்றும்
‘நிலா நிலா பறந்து வரேன்’ என்றும்
பாடப்பட்டன உன் நர்சரி ரைம்ஸ்!

இவை மட்டுமல்ல
அழகாய் உன் தனித்துவத்தோடு
செதுக்கப்படுகிறது குழந்தையும் தான்!

nandri : thinnai